அதிர்ச்சி வீடியோ... கோடியில் போட்ட ரோடு கையோடு வருது...!!

 
தார் ரோடு

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தரகம்பட்டி பகுதியில் இருந்து வீரசிங்கம்பட்டி வரை வீரப்பூர் செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சாலை சேதமடைந்திருந்த நிலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டார். சுமார் 4 கிலோ மீட்டர் தார் சாலை அமைக்க ரூ. 1.12 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் முடிவடைந்து நேற்று இந்த தார்ச்சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால், முறையாக தரமாக தார்ச்சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார்ச்சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 

தரமற்ற வகையில், சாலை போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கைகளால் கிண்டினால் கூட அடை போல உருண்டு சுருளும் மோசமான நிலையில் இந்த சாலை உள்ளது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள், ரோட்டை கையால் அள்ளிக் காட்டி வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தார்ச்சாலை

ரோடு போட்ட உடனே இப்படி பெயர்ந்து வந்தால் எத்தனை நாட்களுக்கு தாங்கும், ஒரு மழைக்கு தாங்குமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மறு ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரோட்டை கைகளால் பெயர்த்து பொதுமக்கள் வீடியோ வெளியிட்ட நிலையில், கடவூர் ஒன்றிய சேர்மன் செல்வராஜ், மற்றும் ஒப்பந்ததாரர் வீரராகவன் ஆகியோர் ஊர் மக்கள் கடப்பாரையை வைத்து சாலையை உடைப்பதாக போலீசில் புகார் தந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web