வீடியோ.... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆனந்த் நகர் பகுதியில் பழைய ரயில்வே காலனி பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகின்றன. ஒருவித அச்சத்துடனே அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு 5 பேர் சிக்கியிருந்தனர்.
#WATCH | Lucknow, UP | The roof of a house collapsed in the Old Railway Colony of Anand Nagar area. Five members of the family were rescued from the debris and taken to the hospital where doctors declared them dead: DCP East Hridesh Kumar pic.twitter.com/ai8zyI2VOw
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 16, 2023
இதனால் அக்கம்பக்கதில் வசிப்பவர்களும் மிகுந்த பதற்றம் அடைந்தனர். உடனடியாக காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் இந்த விபத்தில் வீட்டில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேரை மாநில பேரிடர் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் 5 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!