மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.. கணவன் இறந்த அடுத்த நொடியே மனைவியும் உயிரிழப்பு..!!
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கணேசன் (80). உடல்நிலை சரியில்லாமல் இருந்த கணவர் கணேசனை அவரது மனைவி கண்ணம்மாள் (70) பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று மதியம் கணேசன் இறந்த நிலையில், அருகில் இருந்து பார்த்த அவரது மனைவி கண்ணம்மாள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்கள் திருச்சியில் உள்ள ஓயாமரி மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?