ஆந்திராவை நோக்கி திரும்பிய புயல்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்ல... !

 
வெதர்மேன்

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது.  கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

வெதர்மேன்

புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.  வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை சென்னைக்கு அருகாமையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் சென்னையில் இன்று அக்டோபர் 16ம் தேதி  அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வெதர்மேன்

மேலும் அவர், "சென்னையில் மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால் மழை குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நேற்று பெய்த மிக கனமழை இன்று இருக்காது. சென்னையில் இன்று மழை விட்டு விட்டு பெய்யும், அதி கனமழைக்கு வாய்ப்பில்லை.  நாளையும், நாளை மறுநாளும் மழை தொடரும். ஆனால் அதீத மழை இருக்காது" என பதிவிட்டுள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!