காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்... அதிர்ந்த மாணவி!

 
ஆசிட்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் என்று பேசும் நாம், இன்னும் அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்கவில்லை. அதன் பின்னரும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், தன்னைக் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் (19) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.

காதல்

இந்த நிலையில் அந்த மாணவியிடம் உனது வீட்டில் இருந்து பணம் எடுத்து வருமாறும், செல்போன் மூலம் பணத்தை அனுப்புமாறும் அசாருதீன் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி, அசாருதீனுடன் பழகுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தன்னை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்து உள்ளார். 

அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து உள்ளார். எனவே அந்த மாணவியிடம், தன்னை காதலிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக அசாருதீன் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதற்கு அவருடைய நண்பர் ஆகாஷ் (21) என்பவரும் உடந்தையாக இருந்து உள்ளார்.

மாணவி தற்கொலை

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அசாருதீன் மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web