திணறும் தலைநகரம்... தேர்தல் உஷ்ணம்... தடம் புரண்ட ரயில்... சரிந்த கட்டுமானம்... விவசாயிகள் போராட்டம்... மாசு அதிகரிப்பு!
தலைநகர் டெல்லி நான்கு பக்கமும் திணறிக் கொண்டிருக்கிறது. விவாயிகளை டெல்லியை போராட்டத்திற்காக சூழ்ந்துள்ள நிலையில், இன்று சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இன்னொரு பக்கம் திருமண நிகழ்ச்சிக்காக நேரு ஸ்டேடியம் அருகே தற்காலிக கட்டுமானம் தயாராகி வரும் நிலையில், திடீரென மொத்த கட்டுமானமும் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 12 தொழிலாளிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இன்னொரு புறம் டெல்லிவாலாக்கள் மாசு அதிகரிப்பால் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அக்னி வெயிலை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் கடும் பனியில் வதங்கி கொண்டிருக்கிறார்கள்.
காற்று மாசு டெல்லியின் பெரிய பிரச்சனையாகி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, தேர்தல் அரசியலின் அனலுக்கு பலியாகி வருகிறார்.
விவசாயிகளின் போராட்டத்தில் பங்குபெற்று, ஆதரவு தெரிவித்து, தேர்தலுக்கு அச்சாரம் போட்டிருக்கிறார் ராகுல் காந்தி.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!