வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தூங்கிக் கொண்டிருந்த போது சோகம்!!

 
சத்தியவாணி

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளங்கள், மழைநீர் தேக்கம் இவைகளால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகரில் வசித்து வருபவர் கன்னியப்பன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்தியவாணி . இவர் அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்து வந்தார்.  இரவில் சென்னை புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.  

சத்தியவாணி

சத்தியவாணி வீட்டில் புழுக்கமாக இருந்ததால் வீட்டின் மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கினார். இவரது பக்கத்து வீட்டு சுற்றுச்சுவரில்   ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்தது.  மழையின் காரணமாக அந்த சுற்றுசுவர் திடீரென இடிந்து, மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த சத்தியவாணி மீது விழுந்தது. இதில் சத்தியவாணி படுகாயம் அடைந்தார்.  சுவர் இடிந்து விழுந்தது கீழே தூங்கிக் கொண்டிருந்த அவர் கணவருக்கு தெரியவில்லை.  

சத்தியவாணி

காலை நீண்டநேரம் ஆகியும் மாடியில் தூங்க சென்ற மனைவி கீழே இறங்கி வரவில்லை. இதனால்  சந்தேகம் அடைந்த கன்னியப்பன், மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது சத்தியவாணி மீது பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்து கிடப்பதையும், அவர் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான சத்தியவாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web