உல்லாச வாழ்க்கைக்கு தடை.. கள்ள காதலனுடன் சேர்ந்து பிஞ்சு குழந்தையை தீர்த்து கட்டிய பெற்ற தாய்!

 
பிரியா

கடலூர் அருகே வடக்கு மூளியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (19). இவர்களது மகன் கலையரசன் (11 மாதம்). அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (50). இவரது மனைவி உஷா. இத்தம்பதியின் மகன் ஜெயசூர்யா (23). இந்த நிலையில் பிரியாவும் ஜெயசூர்யாவும் பரிச்சயமானார்கள். நன்றாகப் பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஈர்ப்பு, ஒரு கட்டத்தில் தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரியா தனது குழந்தையுடன் கள்ளக் காதலன் ஜெயசூர்யாவுடன் திடீரென புறப்பட்டார். இதனால் பீதியடைந்த மணிகண்டன் பல இடங்களில் தேடினார். பிரியாவின் உறவினர்களும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜெயசூர்யாவுடன் சென்ற ஸ்ரபிரியா, கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூர் என்ற இடத்திற்கு வந்தார். ஜெயசூர்யா, அவரது தந்தை குமார், தாய் உஷா மற்றும் கள்ளக் காதலி பிரியா மற்றும் அவரது குழந்தை அங்கு வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

பிரியாவின் உறவினர் சிலம்பரசன் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ப்ரியா கள்ளக் காதலனுடன் தங்கி இருப்பது அவருக்குத் தெரியும். இந்நிலையில் நேற்று சிலம்பரசன் தற்செயலாக பிரியா மற்றும் ஜெயசூர்யாவை திரூர் பகுதியில் பார்த்துள்ளார். அப்போது குழந்தை எங்கே என்று கேட்டதற்கு பிரியா முன்னும் பின்னும் பேசினார். சந்தேகமடைந்த சிலம்பரசன், திரூர் போலீசில் புகார் செய்தார்.

உடனே போலீசார் பிரியா மற்றும் ஜெயசூர்யாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிரியா திடுக்கிடும் தகவல் தெரிவித்தார். தன் குழந்தையுடன் வந்திருந்தால் உல்லாச உறவிற்கு தடையாக இருந்ததாக எண்ணியுள்ளார். இதனால் பிரியாவும் ஜெயசூர்யாவும் இணைந்து குழந்தை கலையரசனை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் கலையரசனை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தையின் உடலை சூட்கேஸில் வைத்து திருச்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஓடையில் வீசியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்பின் போலீசார் இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று இரவு திருச்சூர் சென்றுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் நீரோடை அருகே குழந்தையின் சடலம் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் கிடைத்தது.

அதை திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் குழந்தை கலையரசன் உடல் கிடந்தது. குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இந்த கொடூர கொலையை செய்த பிரியா, ஜெயசூர்யா, கொலைக்கு உடந்தையாக இருந்த ஜெயசூர்யாவின் தந்தை குமார், தாய் உஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web