கிணற்றில் ஆட்டோ விழுந்து கோர விபத்து.. இரண்டு சிறுவர்கள் துடிதுடித்து பலியான சோகம்!

 
செஞ்சி விபத்து

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிராஜ்-சத்யா தம்பதியினர் 9 பேர் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே புலிவண்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர். பின்னர் நள்ளிரவில் விழுப்புரம் கப்பா கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்குச் சென்றனர்.

செஞ்சி அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலி..!

அப்போது ஆட்டோவில் ஒன்பது பேர் பயணம் செய்தபோது, ​​அவர்கள் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றில் கவிழ்ந்தது. அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் தண்ணீரில் தத்தளித்து, பின்னர் கிணற்றிலிருந்து கரைக்கு வந்தனர்.

ஆட்டோ டிரைவரின் மகன்கள் பிரகதீஸ்வரன், ஹரி பிரசாந்த் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடனடியாக தீயணைப்பு மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறங்கி சுமார் 3 மணி நேரம் போராடி இரண்டு சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் விவசாய கிணற்றில் ஆட்டோ விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web