வீட்டிற்குள் புகுந்த லாரி!! 3 வது முறையாக சோகம்!!

 
வீட்டுக்குள் லாரி

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஒரு   லாரி சாலையில் சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து   அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தது. இந்த திடீர்  விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த5 பேரும்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே வீட்டிற்குள் 2  முறை லாரி புகுந்ததாகவும் அப்போதும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது 3 வது முறை லாரி வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில் வீட்டிற்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு லாரி டிரைவரிடம் தீவிர  விசாரணை செய்து வருகின்றனர்.

விபத்து

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கும்பகோணத்தில்   அச்சிதமங்கலம்   கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 60.   இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவரது மனைவி பேபி வயது 55 மருமகள் புவனேஸ்வரி அவரது மகன்கள் லக்‌ஷன்,  தர்ஷன் அனைவரும்  ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் நேற்று இரவு தூங்கச்சென்றனர்.

போலீஸ்

அதிகாலை  டால்மியா புரத்தில் இருந்து சிவகுமார் என்பவர் சிமெண்ட் மூட்டையை ஏற்றிக்   கொண்டு வந்து கொண்டிருந்தார்.இதே போல கடந்த 5வருடங்களுக்கு முன்பு டால்மியாபுரத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி வீட்டிற்குள் புகுந்து அப்போதும் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர்த்தப்பினர் அதேபோல கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 4  சக்கர வாகனமும் வீட்டிற்குள் புகுந்து அப்போதும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர் .தற்போது 3வது முறையாக ஏற்பட்ட விபத்திலும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் என்பது குறிப்பிடத்தக்கது
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web