ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை... துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்த ஆளுநர்!

 
சித்தார்த்தன்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள பூக்கோட்டில் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தார்த்தன் என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிப்ரவரி 18ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் சில மாணவர்களால் சித்தார்த் கடுமையாக ராகிங் செய்யப்பட்டது தெரியவந்தது.

குறிப்பாக 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு எதுவும் கொடுக்காமல் சித்தார்த்தை மூன்று நாட்களுக்கும் மேலாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சித்தார்த்தை பல்கலைக்கழக விடுதியில் நிர்வாணமாக சுற்றி வர வைத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சின்சோ ஜான்சன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். சித்தார்த்தின் பெற்றோர் உள்ளிட்ட சாட்சிகளை சின்சோ மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கேரள மாநில ஆளுநர் ஆரிப் கான், சித்தார்த்தின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறினார்.இதனிடையே, நடவடிக்கையாக பல்கலைக்கழக துணைவேந்தர் சசீந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக, துணைவேந்தரை நீக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குற்றச்சாட்டு இருந்தால், அவர்களிடம் விளக்கம் கேட்ட பிறகே, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக நடவடிக்கை எடுத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆளுநர் அனுப்பிய சஸ்பெண்ட் உத்தரவில், துணைவேந்தர் சசீந்தரநாத் அளித்த அறிக்கையில், தனது பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த செயல் கேரள மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web