சிக்கிய செல்போன் மன்மதன்... ப்ளான் போட்டு இளம்பெண்கள் செய்த தரமான சம்பவம்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்களின் செல்போன் எண்களுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு இரவு நேரங்களில் அநாகரீகமாக பேசி தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பலர் தொலைபேசி எண்ணை முடக்கியுள்ளனர்.
செல்போன் எண்ணை பிளாக் செய்ய மறந்த பெண்களுக்கு தொடர்ந்து அழைப்பு வந்ததாக அங்கன்வாடி பெண் பணியாளர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். சம்பவத்தன்று மர்ம நபரிடம் போனில் பேசிய பெண் ஒருவர் நேரில் சந்திக்கலாம் என நைசாக கூறி திருப்பத்தூர் அருகே வரவழைத்து கைது செய்தனர்.
விசாரணையில், செல்போனில் பெண் குரல் கேட்டால் அநாகரீகமாக கருத்து தெரிவித்தவர் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், அங்கன்வாடி பெண் ஊழியர்களிடம் போனில் பேசியதும் தெரியவந்தது. உடனே அங்கன்வாடி ஊழியர்கள் அவரை பிடித்து காரில் உலகபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
காரை விட்டு ஓட முயன்ற அவரை அங்கன்வாடி ஊழியர்கள் பிடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ராஜேந்திரனை கைது செய்த உலகப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கன்வாடி பெண்களின் இந்த துணிச்சலான செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!