இளைஞர் ஓட ஓட விரட்டிக்கொலை... பரபரக்கும் தலைநகர்!!

 
சரத்பாபு

காரனோடை பகுதியில் வசித்து வரும்   கூலித் தொழிலாளி சரத்பாபு. இவர்  மீது திருட்டு உட்பட பல  வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார்.   நேற்று இரவு இவரது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அடித்தே கொலை

அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் சரத்பாபுவை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இதில் சரத்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.   இந்த கொலை வழக்கு தொடர்பாக   தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ஆம்புலன்ஸ்

 இளைஞர் சரத்பாபு 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதே போல் அன்று இரவும், செல்போனில்   சிலரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.எனவே முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web