வட போச்சே.... மறந்த ஸ்பேனரை எடுக்க வந்து வசமாக சிக்கிய திருடர்கள்.. !!

 
திருடர்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை  மேலதொண்டியக்காடு கிராமத்தில் வளவனாறு அமைந்துள்ளது. இங்கு  மின் இறவை நீர் பாசன திட்டத்திற்காக   மின் சாதனங்கள் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.   செப்டம்பர் 27ம் தேதி இரவு இந்த கட்டிடத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.30000   மதிப்புள்ள காப்பர் கம்பிகள் மற்றும் மின் சாதன பொருட்களை திருடி சென்று விட்டனர். இதற்கு பயன்படுத்திய ஸ்பேனர், குறடு, ஸ்குரூ டிரைவர் உட்பட அவர்களின்   பொருட்களை மறந்து அங்கேயே விட்டு சென்றுவிட்டனர்.

திருட்டு

 
மறுநாள்  விட்டுச் சென்ற பொருட்களை திருடர்கள் எடுக்க வரலாம் என கிராம மக்கள் இரவில் மறைந்திருந்தனர். நள்ளிரவில் பைக்கில் 2 பேர் வந்து பொருட்களை எடுக்க முயற்சித்தனர்.  மறைந்திருந்த இளைஞர்கள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இருவரையும் முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கொள்ளை திருட்டு

விசாரணையில் அவர்கள் இடும்பாவனம் ஊராட்சி அடைஞ்சவிளாகத்தில் வசித்து வரும்   அண்ணன், தம்பி  எனத் தெரியவந்தது. அவர்கள் சக்திவேல் மற்றும்  விஜய்.   மன்னார்குடி அருகே திருமக்கோட்டை ஏரிக்கரை ராஜா , துர்கா நகர் ரஜினி என தெரிந்தது. இவர்  4 பேரையும்  கைது செய்து  காவல்துறையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web