திருப்பதி பேருந்தையே ஆட்டைய போட்ட கில்லாடி கிட்டு... பரபரத்த தேவஸ்தானம்!!
தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்யும் கோவில் உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பேருந்து திருட்டு போனது. இன்று அதிகாலை 3 மணிக்கு எச்.வி.சி காட்டேஜ் அருகே நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுநர் தேநீர் அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர் அந்த பேருந்தை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
ஓட்டுநர் தேநீர் அருந்திவிட்டு வந்து பார்த்தபோது பேருந்து காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கெண்டு சோதனை செய்ததில் மின்சார பேருந்து 90 கி.மீ தொலைவில் நாயுடுப் பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.
மின்சார பேருந்தை திருடிச் சென்ற மர்மநபர் மின்சார பேருந்தை 100 கி.மீ ஓட்டி வந்துள்ளார். மேலும் மின்சார பேருந்தில் சார்ஜ் இல்லாததால் அந்த மர்மநபர் பேருந்தை அங்கேயே விட்டு சென்றுவிட்டார். ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான மின்சார பேருந்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...