க்யூட் வீடியோ... அம்மாட்ட சொல்லாம ஜாலி ரைடு... சாலையில் சுற்றித்திரியும் குட்டிப்புலிகள்!!
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். இந்த வனப்பகுதியில் சர்வசாதாரணமாக புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் சுற்றித்திரிந்து வருகின்றன. குறிப்பாக இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில், 2 புலிக்குட்டிகள் நடந்து சென்ற வீடியோ காட்சிகள் #tigercubs #sathyamangalamtigerreserve #tnfd #kamadenutamil pic.twitter.com/m9WqTCtd9u
— Kamadenu (@KamadenuTamil) October 12, 2023
புலிகள் காப்பகத்தின் வெளிப்புற பகுதிகளில் அடிக்கடி புலியின் நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்க முடியும். கடம்பூரில் இருந்து மலைப்பகுதியிலிருந்து அருகில் உள்ள குன்றிவனம் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் 2 புலிக்குட்டிகள் சாவகாசமாக நடை பயின்று சென்றன. பேருந்தில் இருந்தவர்கள் இதைப் பார்த்து புகைப்படங்கள், வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
புலிகளை பார்த்த பேருந்து ஓட்டுனர் பேருந்தின் வேகத்தை முற்றிலும் குறைத்தார். புலிக்குட்டிகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை மிதமான வேகத்தில் பேருந்தை இயக்கியுள்ளார். தாய்ப்புலி அருகில் இல்லாமல், குட்டிகள் அப்பகுதியில் தனியாக சுற்றி திரிந்தன. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்தவர்கள் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...