நாளை மறுநாள் அக்டோபர் மாத திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது . தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சாமிதரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 18ம் தேதி காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் தோமாலை உட்பட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்று பிற்பகல் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
