இன்று அதிர்ஷ்டம் தரும் ஆடிவெள்ளி... இப்படி வழிபட மறந்துடாதீங்க!

ஆடி மாதம் முழுவதுமே அம்பிகையை கொண்டாட வேண்டிய நாட்கள். இருந்தாலும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி இவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் ஆடி வெள்ளி இல்லத்தரசிகள், குடும்பத்தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வரும். இந்த ஐந்து வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பது சிறப்பானது. அவ்வாறு விரதம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரே ஒரு வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஆடி வெள்ளியில் விரதம் இருந்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த வருடத்தில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை முடிந்த நிலையில் இன்று ஜூலை 26ம் தேதி வெள்ளிக்கிழமை. ஆகஸ்ட் 02, ஆகஸ்ட் 09, ஆகஸ்ட் 16 ஆகிய 3 வெள்ளிக்கிழமைகள் மீதமிருக்கின்றன.
சூரியன், கடகத்தில் பயணம் செய்யும் மாதமே ஆடி மாதமாகும். வெள்ளிக்கிழமைகள் செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கைக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமான கிரகமான சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. அதுவே ஆடி மாதத்தில் வரும் போது சுக்கிரனும், சந்திரனும் இணையும் நாளாக வெள்ளிக்கிழமை அமையும். இப்படி சுக்கிர, சந்திர சேர்க்கை ஏற்படும் போதும் பெண் தெய்வத்தின் சக்தி அபரிமிதமாக காணப்படும். அதனால் தான் ஆடி வெள்ளி அம்பிகைக்கு மிகவும் உகந்தது என சொல்லப்படுகிறது.
திருமண தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருக்கலாம்.வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது, நிம்மதியே இல்லை, செல்வம் தங்காத நிலை , தீராத கடன் பிரச்சனை, நீண்ட காலமாக நோயால் அவதிப்படுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருந்து வழிபடலாம்.
ஆடி வெள்ளி விரதம் இருப்பது மிகவும் சுலபமானதே. அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலிலும் விளக்கேற்றுவது சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள மகாலட்சுமி படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைக்கலாம். அம்பாள் படம் இல்லாதவர்கள் திருவிளக்கையே அம்பிகையாக பாவித்து விளக்கேற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் காலை, பிற்பகல் 2 வேளையும் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் காலை ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருந்து, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்ளலாம்.
உடல் வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் அம்பிகைக்கு உரிய லலிதா சகஸ்ரநாமம், காமாட்சி அஷ்டகம், செளந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை இவைகளை மனதில் சொல்லிக் கொண்டே செய்யலாம். பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வதை விட ஸ்தோத்திரங்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா