இன்று குரு பெளர்ணமி... திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 
திருவண்ணாமலை கிரிவலம் பெளர்ணமி

இன்று ஆடி மாத பெளர்ணமி தினத்தையொட்டி நேற்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து கிரிவலம் சென்றனர்.  இன்று குரு பெளர்ணமி தினத்தையொட்டி நேற்றிரவு முதல் கிரிவலம் துவங்கியது.

“ஞான தபோதனரை” வாவென்றுஅழைக்கும் தலம் ‘திருவண்ணா மலை’. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள ‘திரு அண்ணாமலை’ உள்ளன. இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் வலம் வந்து வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். இதையொட்டி, ஆடி மாத பவுர்ணமி நாளான நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை

பின்னர், மெல்ல ,மெல்ல அதிகரித்த பக்தர்களின் எண்ணிக்கை மாலை 4 மணிக்கு பிறகு கிடுகிடுவென உயர்ந்தது. 14 கி.மீ., தொலைவுள்ள கிரிவலப் பாதையில் ‘யாத்திரை’ சென்ற சிவ பக்தர்கள், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்த படி சென்றனர். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணா மலையார் கோயில், அஷ்டலிங்க கோயில் மற்றும் திருநேர் அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மூலவரை தரிசித்தனர். விடிய, விடிய பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வார விடுமுறை (ஞாயிறு) என்பதால், கிரிவல யாத்திரை இன்றும் தொடரும்.

கிரிவலம்

பவுர்ணமி மற்றும் வார விடுமுறை என்பதால், அண்ணா மலையார் கோயிலிலும் பக்தர் களின் கூட்டம் அலைமோதியது. கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். இடைவிடாமல் சுமார் 15 மணி நேரம் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகை இன்றும் (21-ம் தேதி) தொடரும் என்பதால், விரைவாக சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளன.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web