இன்று வேளாங்கண்ணி தேர் பவனி!! அதிகாலை முதலே குவியத் தொடங்கிய பக்தர்கள்!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. வங்கக்கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க உலகம் முழுவதிலும் இருந்து வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்டு 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்ப்பவனி இன்று செப்டம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது.
தேர்பவனியில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை நாளை ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!