இன்று கடைசி தேதி... 10வது பாஸானவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. 772 காலி பணியிடங்கள்!

 
ரயில்வே துறை வேலை வாய்ப்பு ரயில்

விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கு இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுல்லது. தென்கிழக்கு மத்திய ரயில்வே அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு, 10வது தேர்ச்சியடைந்தவர்களிடம் இருந்து ஆர்வமும், விருப்பமும் இருந்தால் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் SECRன் அதிகாரப்பூர்வ தளமான https://secr.indianrailways.gov.in/ மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆள்சேர்ப்பின் மூலம் மொத்தமாக நிறுவனத்தில் 772 பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : இன்று ஜூலை 7, 2023

காலியிட விவரங்கள்

நாக்பூர் பிரிவுக்கு : 708 பணியிடங்கள்

இந்தியன் ரயில் ரயில்வே

மோதிபாக் பனிமனையில் : 64 பணியிடங்கள்

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்வை அல்லது அதற்கு சமமான தேர்வை குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வித்துறை வாயிலாக முடித்திருக்க வேண்டும் மற்றும் அறிவிக்கப்பட்ட பிரிவில் தேசிய வர்த்தகச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது வரம்பு ஜூன் 6, 2023 தேதியின்படி 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செயல்முறை செய்யப்படுகிறது. மெட்ரிகுலேஷன் மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள், தொழிற்பயிற்சி மேற்கொள்ளப்படும் டிரேடில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதம் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்தியன் ரயில் ரயில்வே

ஆன்லைன் விண்ணப்பத்தை இன்று மாலைக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் நகல் எதுவும் SECRன் நாக்பூர் பிரிவுக்கு தபாலில் அனுப்பப்பட வேண்டியதில்லை. மறக்காம உடனே விண்ணப்பத்தை அனுப்பி வைச்சுடுங்க.

 இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web