இன்றே கடைசி தேதி... டிஎன்பிஎஸ்சி குரூப் 4... 6,244 காலி பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!

 
டிஎன்பிஎஸ்சி

இன்றே கடைசி தேதி... மிஸ் பண்ணாதீங்க. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குருப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்தை அனுப்புவதற்கு இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6,244 காலி பணியிடங்கள். தமிழகத்தில் அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. துறை வாரியான பணிகளுக்கு குரூப் வாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். அரசுத் துறைகளில்  காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் – 4 தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி

இதற்கான  விண்ணப்ப பதிவு இன்று பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைகிறது.  இந்நிலையில், அவகாசத்தை நீட்டிக்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உட்பட 16 வகை பணியிடங்களுக்கான   தேர்வு  ஜூன் 9ல்  நடைபெற உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜனவரி 30ம் தேதி தொடங்கிய நிலையில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி

இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கு, இன்னும் கூடுதல் நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என  பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை    டி.என்.பி.எஸ்.சி. யின்  அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலம்  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், விண்ணப்பங்களை திருத்துவதற்கு மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை 3 நாட்கள் அவகாசம் இருப்பதாகவும்  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web