நாளை இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...!!

 
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக  பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட  10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் மழை
அத்துடன்  தென்கிழக்கு வங்கக்கடலில்  நவம்பர்  27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  வலுப்பெற்று 29ம் தேதி காற்றழுத்த மண்டலமாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மழை
அதேபோல், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து  பல்வேறு மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web