நாளை பள்ளிக்கு விடுமுறை ... வெடிகுண்டு மிரட்டலால் பீதியில் பெற்றோர்கள்!

 
விடுமுறை

கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில்  வெளியான இந்த மிரட்டல் காரணமாக உடனடியாக மாணவர்களை அழைத்துச்செல்ல பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டது.  அந்த வகையில் இன்று சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக பள்ளியில் பிள்ளைகளை விட வந்த பெற்றோர்கள் கையோடு திரும்ப அழைத்து சென்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

 இதனைத் தொடர்ந்து கோவை வடவள்ளியில் உள்ள PSBB தனியார் பள்ளிக்கு நாளை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்துள்ளது.  வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நாளை பள்ளிக்கு விடுமுறை அறிவித்ததுடன் 9, 11ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

இதனால் பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.  அடுத்தடுத்த மிரட்டல்களால் மாணவர்களின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web