நாளை போக்குவரத்து மாற்றம்... இந்தப் பக்கம் போகாதீங்க!!

நாளை செப்டம்பர்17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டம் வருகை தர இருக்கிறார். இதனையொட்டி இம்மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.ட்ரோன்கள் பறக்க்த் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ நாளை முதல்வரின் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட உள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 8 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் .
அதன்படி சென்னை முதல் பெங்களூரு வரை மற்றும் பெங்களூரு முதல் சென்னை வரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் சென்னை - தென்கடம்பந்தாங்கல் - முத்துக்கடை- பெல் - திருவலம் - சேர்காடு - ஆந்திரா நரஹரிபேட்டை _ கிருஷ்டியான்பேட்டை - காட்பாடி குடியாத்தம் கூட்ரோடு - கீ. வ.குப்பம் - குடியாத்தம் நான்கு முனை சந்திப்பு - நேதாஜி சவுக் - உள்ளி கூட்ரோடு - மாதனூர் - பெங்களூரு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பலமநேர் முதல் சென்னை வரை / சென்னை முதல் பலநேர் வரை செல்லும் வாகனங்கள் பலமநேர் - சைனகுண்டா சோதனை சாவடி - குடியாத்தம் நான்கு முனை சந்திப்பு - கீ.வ.குப்பம் - காட்பாடி குடியாத்தம் கூட்ரோடு - கிருஷ்டியான் பேட்டை சோதனை சாவடி - ஆந்திரா நரஹரிபேட்டை - சேர்காடு - திருவலம் - பெல் - முத்துக்கடை - தென்கடம்பந்தாங்கல் - சென்னை வழியாக செல்ல அனுமதி
திருவண்ணாமலை முதல் பெங்களூரு வரை / பெங்களூரு முதல் திருவண்ணாமலை வரை:- திருவண்ணாமலை - சாத்துமதுரை - ஸ்ரீபுரம் கூட்ரோடு - மூலைகேட் - அணைக்கட்டு - அகரம் - மாதனூர் - பெங்களூர் வழித்தடத்தில் செல்ல வேண்டும்.
திருவண்ணாமலை முதல் சித்தூர் வரை / சித்தூர் முதல் திருவண்ணாமலை வரை:- திருவண்ணாமலை - ஆரணி - திமிரி - ஆற்காடு - முத்துக்கடை - திருவலம் - சேர்காடு - ஆந்திரா நரஹரிபேட்டை - சித்தூர் வழியாக பயணிக்கும் அனைத்து கனரக வாகன ஓட்டுநர்கள் இந்த உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் “ எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!