பகீர்... ரூ3100 கடனை செலுத்ததால் வியாபாரி நிர்வாண ஊர்வலம் !! அதிர்ச்சி வீடியோ!!
உத்திரபிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சந்தையில் அவரை நிர்வாண ஊர்வலமாக அழைத்து சென்றணர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ரூ3,100 கடனை திரும்ப செலுத்தாத காய்கறி வியாபாரியை சரமாரியாக அடித்து, அவரை சந்தையில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
नोएडा की फल मंडी में लहसुन बेचने वाले अनिल को बदमाशों ने नंगा करके सरेआम घुमाया। उसका गुनाह बस इतना था कि उसने एक व्यक्ति से 5 हज़ार रुपये उधार लिए थे, जिसमें 3 हजार वो अभी नहीं लौटा पाया था।
— UP Congress (@INCUttarPradesh) September 19, 2023
सोचिये! 3 हज़ार रुपये के लिए इतनी बड़ी सज़ा...
3 हजार रुपये के लिए किसी के स्वाभिमान… pic.twitter.com/mILjkLX3rn
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அந்த வியாபாரியை வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். இது குறித்து போலீசார் “ பாதிக்கப்பட்டவர் உத்தரபிரதேசத்தின் மைன்பூரி மாவட்டத்தில் வசித்துவருபவர். அவர் ஒரு மாதத்திற்கு முன்பு 5,600 ரூபாய் கடன் வாங்கி, பூண்டு வியாபாரம் செய்து வந்தார். செக்டார் 88ல் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தையில் பணிபுரிந்து வருகிறார். செப்டம்பர் 18ம் தேதி திங்கள்கிழமை அந்த வியாபாரி, தான் வாங்கிய ரூ.5600 கடனில் ரூ. 2,500 ஐ திருப்பிச் செலுத்தச் சென்றார், மீதமுள்ள தொகையை சிறிது நாட்கள் கழித்து திருப்பித் தருவதாக கமிஷன் ஏஜெண்டிடம் கோரினார்.
கமிஷன் முகவர் தனது கணக்காளரையும் இரண்டு தொழிலாளர்களையும் அழைத்து தன் ஆடைகளைக் களைந்து, தடிகளால் என்னைத் தாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார்” எனக் கூறியுள்ளனர். ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் “முக்கிய குற்றவாளி சுந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் பகந்தாஸ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...