பரபரப்பு... உள்ளாடைகளை அவிழ்த்து போட்டு திருநங்கைகள் காவல்நிலையத்தில் முற்றுகை...!!

 
உள்ளாடை

செங்கல்பட்டு ஊரப்பாக்கம் பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி நடப்பதாக தொடர் புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் வேட்டை நடைபெற்றது. அத்துடன் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஊரப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும் படியான முறையில்  3 பேர் சுற்றித் திரிந்தனர்.

திருட்டு

அவர்களை பிடித்து தீர விசாரித்து சந்தேகத்தின் அடிப்படையில்  சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் மகேஷ் ,  லிங்கேஸ்வரன் , சென்னை மாதவரம் பால் பண்ணை அருகில் வசித்து வரும் ஸ்டீபன் ராஜ் மூவரையும் கைது செய்து செய்தனர்.  இவர்கள் மூவரும் சாலையில் தனியாக செல்லும், பெண்கள் மற்றும் தனி நபர்களை குறி வைத்து, பணம், நகை, செல்போன் என தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.  அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். 

போலீஸ்


 இவர்களை  கைது செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக  3 பேரையும் விடுவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். அதில்  திருநங்கை ஒருவர் தனது உள்ளாடைகளை அவிழ்த்து காவல் நிலைய வாசலில் தூக்கி விசி அராஜகத்தில் ஈடுபட்டார். கைகளை தட்டி கத்தி கூச்சலிட்டதால் காவல் நிலைய வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web