சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த 2 திருநங்கைகள்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.. இது தான் முதல் முறையாம்!

 
காயத்ரி - முல்லை

சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தான். வாரத்திற்கு ஒரு முறை ஓட்டல் லீவு அன்று நண்பர்களுடன் விளையாடுவதற்கு செல்வான். இவ்வாறு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் விளையாட சென்ற சிறுவன் மிகுந்த சோர்வுடன் வீட்டிற்கு வந்தான்.

அதை பார்த்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் தீவிர விசாரணை நடத்தியதில், 2 திருநங்கைகள் சிறுவனிடம் நைசாக பேசி பிரியாணி வாங்கி கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், யாரை அழைத்தாலும் செல்ல வேண்டாம் என மகனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விளையாடச் சென்ற வாலிபரை அதே திருநங்கைகள் ஏமாற்றி அழைத்து சென்று 4 மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் காக்காபாளையம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருநங்கைகளான கார்த்திக் (எ) காயத்ரி (26), முல்லை (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பிரியாணி வாங்கிக் கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை... திருநங்கை  இருவருக்கு ஆயுள் தண்டனை!

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, திருநங்கைகளான காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தமிழகத்தில் சிறுவனை பாலியல் துன்புறுத்திய வழக்கில் திருநங்கைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. போலீசார் இருவரையும் கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web