பகீர்... செல்போனில் அந்தரங்க புகைப்படங்கள்... சொகுசு ஹோட்டலில் முக்கோண காதல் பயங்கரம்!

 
அஞ்சலி

நேற்று முன் தினம் கவுகாத்தியில் ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல் ஒன்றில் நடந்த ஒரு முக்கோணக் காதல் சந்திப்பு, கொடூரமான கொலையில் முடிந்தது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் 500 கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தாவிற்கு பறந்து செல்வதற்கு முன்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

சந்தீப் குமார் காம்ப்ளே (44) என்பவர் கவுகாத்தி விமான நிலையம் அருகே உள்ள அசாரா சொகுசு ஹோட்டலில் நேற்று முன் தினம் மதியம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரைக் கொலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அஞ்சலி ஷா(25) மற்றும் அவரது காதலன் பிகாஷ் குமார் ஷா(23) ஆகிய இருவரும் கொல்கத்தாவிற்கு நேற்று முன் தினம் இரவு விமானத்தில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். ஆனால் உடனடியாக போலீசார், அவர்கள் இருவரும் விமான நிலையத்தை சென்றடைவதற்கு முன்பாகவே கைது செய்தனர்.

Crime News: Love Triangle, Murder & 5-Star-Hotel: How Suspects Landed In  Cop Net Right Before Flight | Crime News, Times Now

கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் அஞ்சலி ஷா. கடந்த ஆண்டு விமான நிலையத்தில் அறிமுகமான காம்ப்ளேவுடன் அஞ்சலி ஷா நட்பாக பழகிய நிலையில், இருவரும் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அஞ்சலி ஷா ஏற்கெனவே பிகாஷ் என்பவருடன் காதல் உறவில் இருந்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பிகாஷ், அஞ்சலி ஷாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தது அஞ்சலி ஷாவுக்கு பிரச்சனையை அதிகரித்துள்ளது. இதில், காம்ப்ளேவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அஞ்சலிஷா தனது செல்போனில் வைத்திருந்தது மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. 

இது குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் அதிகரித்த நிலையில், இருவரும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுத்தனர். அஞ்சலியும், காம்ப்ளேவும் கொல்கத்தா விமான நிலையத்தில் சந்திக்க திட்டமிட்டிருந்தனர், ஆனால் காம்ப்ளே அதை கவுகாத்திக்கு மாற்றினார், அங்கு அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறையை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அஞ்சலியும், பிகாஷூம் ஒன்றாக கெளகாத்தி பறந்தனர் ஆனால் அங்கு சென்றதும் இருவரும் பிரிந்தனர். காம்ப்ளேவுக்குத் தெரியாமல் அதே ஹோட்டலில் தனக்கென ஒரு அறையை பிகாஷ் பதிவு செய்தான். அவர்களின் திட்டத்தின்படி, அஞ்சலியை காம்ப்ளே நகரத்தில் சந்தித்து, அவர்கள் ஒன்றாக ஹோட்டலுக்குச் சென்றனர். 

Love Triangle Murder Unraveled: Guwahati Hotel Horror - PUNE.NEWS

அவர்களது சந்திப்பின் போது, திடீரென அங்கே ​​பிகாஷின் வருகை காம்ப்ளேவை ஆத்திரமடையச் செய்தது. இருவருக்கும் இடையே சண்டை வெடித்து தாக்குதலில் ஈடுப்பட்டனர். சண்டையில் காம்ப்ளே படுகாயமடைந்தார், அதைப் பார்த்த காதல் ஜோடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் காம்ப்ளேக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றனர். அதில் அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

புனேவைச் சேர்ந்த கார் டீலர் காம்ப்ளே, சொகுசு ஹோட்டலின் அறையில், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், தரையில் கிடந்துள்ளதை ஹோட்டல் ஊழியர்கள் முதலில் பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் கவுகாத்தி நகர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாக ஹோட்டல் பதிவு, சிசிடிவி காட்சிகள் மற்றும் விமான நிலைய பயணிகளின் பட்டியல் மூலம் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை பிடிக்க வலைவீசினார்கள். இரவு 9:15 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் அஞ்சலியும் பிகாஷும் ஹோட்டலுக்கு அருகில் கைது செய்யப்பட்டனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web