மீண்டும் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா... வெச்சு செய்யும் ரசிகர்கள்!

 
த்ரிஷா

நடிகர் மன்சூர் அலிகானுடனான சர்ச்சை, மன்னிப்போம்... மறப்போம் என்று ட்வீட் செய்து ஓய்ந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை த்ரிஷா. நடிகை த்ரிஷாவின் ட்வீட்டை ரீ போஸ்ட் செய்து வறுத்தெடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், அவசர அவசரமாக தன்னுடைய பதிவையும் நீக்கிவிட்டார் த்ரிஷா.

த்ரிஷா

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பொதுவெளியில் த்ரிஷாவை தரக்குறைவாக பேசினார். இதுகுறித்து கண்டித்து த்ரிஷா ட்விட் வெளியிடவும், இது பெரிய பிரச்சினையாக மாறியது. மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் அவர் விசாரிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வந்தவர் பிறகு, 'த்ரிஷாவே என்னை மன்னித்து விடு' என்றார். த்ரிஷாவும் மன்னித்து விட்டதாக ட்விட் செய்தவர், காவல் நிலையத்திலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் த்ரிஷா.

த்ரிஷாவின் பதிவு...

கடந்த ஒன்றாம் தேதி ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் 'அனிமல்' திரைப்படம் வெளியானது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் வங்கா ரெட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். தந்தைக்கும், மகனுக்கும் இடையிலுள்ள பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் வெளியானது.

அதிகளவிலான வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ரசிகர்கள் சொன்ன நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகை த்ரிஷா, " ஒரே வார்த்தையில் இந்த படம் குறித்து சொல்ல வேண்டும் என்றால் 'கல்ட்' " என்று குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். இதற்கு தான் தற்போது ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர். சுமாரான படத்தை ஏன் இப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என த்ரிஷாவை அவர்கள் இணையத்தில் திட்டி தீர்த்தது சர்ச்சையாகியுள்ளது. இதனால் அந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவசர அவசரமாக நீக்கியுள்ளார் த்ரிஷா.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web