பெரும் சோகம்... பானிபூரி சாப்பிட்டு 2 சிறுவர்கள் பலி... கதறித் துடித்த பெற்றோர்... !

 
பானிபூரி

நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற கருத்தின் அடிப்படையில் அன்றாட உணவை அமைத்து கொண்டனர். ஆனால் மாறி வரும் வாழ்க்கை முறையில் உணவே விஷமாகி வருகிறது. உணவு தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களின் அலட்சிய போக்கால் பல நேரங்களில் விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் வசித்து வருபவர்   ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா. இவர்களுக்கு  ராமகிருஷ்ணா,   விஜய் என 11 மற்றும் 6 வயதில் இருந்து வருகின்றனர் . இவர்கள் இருவரும் ஜனவரி 24ம் தேதி புதன்கிழமை  அப்பகுதியில்  உள்ள பானி பூரி கடையில்  பானி பூரி சாப்பிட்டுள்ளனர்.  இவர்களுக்கு அவரது தந்தை ரவி தான் இந்த பானிபூரியை வாங்கி கொடுத்திருந்தார்.

பானிபூரி

அதனை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்ற சிறுவர்கள்  இருவருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவமனையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் உயிரிழந்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்கு பதிவு செய்து  சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சிறுவன் பலி

 போலீசார் சிறுவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்குறித்து தீவிர்  விசாரணை நடத்தி வருகின்றனர். பானி பூரி சாப்பிட்டதால் சிறுவர்கள் உயிரிழந்தர்களா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web