காதல் மனைவி திடீர் உயிரிழப்பு... துக்கம் தாங்காமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை... !
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி செல்வநகர் பச்சூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன். இவர் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் கந்திலி பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமிஎன்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பச்சூரில் உள்ள யோகேஸ்வரன் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்த யோகேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தன் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க