அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பள்ளி மாணவர்கள் பலி.. கதறி துடித்த பெற்றோர்..!!

 
விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்  கிராமத்தில் வசித்து வருபவர்  மணிகண்டன் . இவருடன்   பச்சையப்பன் ,  இந்துமணி  3 பேரும் நேற்று இரவு  ஒரே பைக்கில்  உலகியநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். எதிரில் அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக்  மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.  

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

கள்ளக்குறிச்சி


உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த  விபத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்  கதறி அழுத சம்பவம் காண்பவர்கள் கண்களில்  கண்ணீரை  வரவழைத்தது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web