யு.பி.ஐ. மூலம் சாதனை... ஒரே மாதத்தில் ரூ.27 லட்சம் கோடியை கடந்த பணப்பரிமாற்றம்!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் யு.பி.ஐ. (UPI) வழியாக ரூ.27 லட்சத்து 28 கோடி மதிப்பில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சியில் புதிய சாதனையாகும்.
தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 2,070 கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதத்தை விட 3.6 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலச் செலவுகள், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் உள்ளிட்ட காரணங்களால் பரிவர்த்தனைகள் அதிகரித்ததாகவும், தினசரி சராசரியாக ரூ.66.8 கோடி அளவுக்கு யு.பி.ஐ. மூலமாக பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன எனவும் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
