வீடியோ: வாஜ்பாய் நினைவு தினம் | ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி 'சதைவ் அடலில்’ அஞ்சலி!
இன்று முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' இடத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனைக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களும் முன்னாள் பிரதமரின் நினைவிடமான 'சதைவ் அடல்' பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
LIVE: President Droupadi Murmu pays homage to Shri Atal Bihari Vajpayee on his death anniversary at 'Sadaiv Atal' https://t.co/dhXJthaTAC
— President of India (@rashtrapatibhvn) August 16, 2024
வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யாவும், நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்த 'சதைவ் அடல்' வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் சதைவ் அடல் நினைவிடத்தில் கலந்து கொண்டார்.
"முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, நமது உத்வேகத்தின் ஆதாரம், மரியாதைக்குரிய அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி" என்று ட்விட்டரில் பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புகழஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் அமித் ஷா, ஒரு பிரதமராக நாட்டை மூலோபாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலப்படுத்தினார். நாட்டில் அரசியல் தூய்மை, தேச நலன் மீதான விசுவாசம், கொள்கைகளில் உறுதிப்பாடு என்று பேசப்படும் போதெல்லாம், அடல்ஜி நினைவு கூறப்படுவார். ஒருபுறம், பாஜகவை நிறுவுவதன் மூலம், அவர் பிரதமராக இருந்தபோது, தேசிய நலன் சித்தாந்தத்தை பிரபலப்படுத்தினார். பாரத ரத்னாவின் மதிப்பிற்குரிய அடல்ஜியின் நினைவு நாளில் அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலிகளை செலுத்துகிறேன்" என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

1924ம் ஆண்டு குவாலியரில் பிறந்த வாஜ்பாய், பல தசாப்தங்களாக பிஜேபியின் முகமாக இருந்தார். இந்திய பிரதமராக தனது முழு ஆட்சி காலத்திலும் பதவியில் இருந்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையிலும், மீண்டும் 19 மார்ச் 1998 முதல் 22 மே 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்துள்ளார். 1977 முதல் பிரதமர் மொராஜி தேசாய் அமைச்சரவையில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 1979. ஆகஸ்ட் 16, 2018 அன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
