நெகிழ்ச்சி.... அப்பா இறப்பதற்கு 2 நாள் முன்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத விஜய பிரபாகரன்... !

 
கேப்டன்

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் கண்ணீர் விட்டு பேசியது அனைவரது கண்களையும் குளமாக்கியது.
கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார் அரசு மரியாதையுடன் அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தொண்டர்கள் என 15லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று கேப்டனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி திரையுலகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, அவரது இரண்டு மகன்களும் வருகை தந்திருந்தனர்.இதில்  மேடைக்கு வந்து விஜயபிரபாகரன் பேசிய போது, "பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்மார்களே... அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே... இளைஞர்களே.. பொதுமக்களே.. என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே மற்றும் திரையுலக பிரமுகர்களே உங் எல்லோருக்கும் என் முதல் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தொடங்கினார்.   இனி என் மூலம் தமிழகம்  முழுவதும் இந்த வார்த்தை ஒளித்துக்கொண்டே இருக்கும். இதனை நான் சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன் எனப் பேசினார். இதனையடுத்து அவர் பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார்.  

கேப்டன்

"நான் சின்ன வயதில் இருந்து, என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை  விட எங்க அப்பாவ தான் நான் நிறைய தடவை பார்த்து வளர்ந்திருக்கேன்.   நான் அழுகிறேன் என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் கூறி பேச முடியாமல் துக்கத்தில் பேசமுடியாமல் கதறினார்.  அப்பா என்றால் மிகவும் ஏமோஷ்னல் ஆகிவிடுவேன்.அதனால்  என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  ஒன்று மட்டும் சொல்கிறேன் கேப்டன் எங்கேயும் போகவில்லை. நம்முடன் தான் இருக்கிறார்  மேலும் நான் அப்பா இறந்ததில் இருந்து, இதுவரை   எந்த ஒரு மீடியாவிலும், யார்கிட்டயும் பேசவே இல்ல.  முதன்முறையாக மேடை மீது ஏறி பேசும் சினிமா நிகழ்ச்சி. நானும், தம்பி சண்முக பாண்டியனும் எந்த விழாவிலும் கலந்து கொண்டதே இல்லை.  மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.  நான் பல விஷயங்கள் பேசணும் என நினைத்தேன். ஆனால் இப்போதைக்கு எதுவும் எனக்கு பேசவரல.  எங்களுக்கு எல்லோருக்கும் சின்ன வயசுல இருந்து கொடுக்க சொல்லி கொடுத்து வளர்த்துருக்காரு எங்க அப்பா. அதனால் என்னைக்குமே அது மாறாது. அம்மா இதை தான் வீடியோவிலும் சொல்லியிருந்தாங்க. இனி கேப்டன் இல்லை, இனி யார் எங்களுக்கு இருக்காங்க அப்படின்னு யாரும் நினைக்காதீங்க... உங்களுக்காக தான் எங்க அப்பா எங்கள விட்டுட்டு போய் இருக்காரு.  


எங்க அப்பாவுடைய கனவு என்னவோ, அதை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இங்கே இருக்கோம். இதை நான் மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். இந்த புத்தாண்டில்  , என்னுடைய பிறந்தநாளில்  இந்த ஆண்டு ரெசல்யூஷன் சொல்றப்போ நான் அப்பா கிட்ட சில விஷயங்கள் பர்சனலா பேசினேன். மத்த வருடங்களை விட இந்த வருடம் நான் சொன்ன விஷயங்கள் எனக்கும் என் அப்பாவுக்கு மட்டுமே தெரியும். அது என்ன என்பதை காலம் உங்களுக்கு சொல்லும். கடந்த பத்து வருடமா கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் எத்தனையோ  கஷ்டப்பட்டார்.  இந்த பத்து வருஷமா யாராக இருந்தாலும் இந்த அளவுக்கு தாங்கி இருப்பார்களா? எனத்  தெரியவில்லை.  குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று. இந்த 71 வயசு வரைக்குமே, அவர் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்றால், அது அவருடைய மன உறுதி தான் காரணம். சில youtubeசேனல்களில்  விஜயகாந்த் பற்றி தவறான செய்திகள் வெளியாகின்றன.

கேப்டன்

ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. எங்கள் அப்பாவுக்கு கடைசி வரைக்கும் எல்லாமே ஞாபகம் இருந்துச்சு.   இறப்பதற்கு 2  நாட்களுக்கு முன்பு கூட எங்க வீட்ல வேலை செஞ்சுட்டு இருந்த   குமார் அண்ணண், சோமு அண்ணன் என ரெண்டு பேர் கிட்டயும் அவருடைய பட பாடல்கள் எல்லாத்தையும் போட்டு கொடுக்க சொல்லி தாளம் போட்டு ரசிச்சிருக்காரு. அவங்க சொன்ன பின்னர் சிசி டிவி பார்க்கும் போது தான் இதுவே எங்களுக்கு தெரியும். இந்த முறையும் வந்திடுவார் என்று தான் நினைத்தோம். ஆனால் வர்ல கேப்டன் சொன்ன மாதிரி விஜயகாந்த் வாழ்ந்தார், இருந்தார்,  இந்த மக்களுக்காக என சொல்லி விடை பெறுவதாக விஜயகாந்த் மகன் தெரிவித்தார்.  அப்பாவுக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்வதற்கு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web