துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு இளைஞர் பலி!! மணிப்பூரில் தொடரும் வன்முறை!!

 
மணிப்பூர்

மணிப்பூரில் இரண்டு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட   மோதலால் வன்முறை வெடித்துள்ளது. மே 3ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மீண்டும் ஏற்பட்ட வன்முறையால்    குக்கி சமூகத்தினர் வசிக்கும் கிராமத்தில் வசித்து வரும்   இளைஞர் உயிரிழந்தார். கோயிரான்டாக் கிராமத்தில் வன்முறை கும்பல் தாக்கியதில் 30 வயது இளைஞர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மணிப்பூர்


மணிப்பூரின் கொய்ரென்டாக் கிராமத்தில்    நேற்று காலை 10 மணியளவில் குக்கி-ஸோ சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முப்பது வயதான ஜங்மின்லுன் காங்டே படுகொலை செய்யப்பட்டார்.    வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் தனித்தனி நடவடிக்கைகளால்  கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

மணிப்பூர்


ஆகஸ்ட் 27 அன்று மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் 3 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. உடனடியாக   தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கடந்த 4 மாதங்களாக நீடித்து வரும் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web