நெகிழ்ச்சி... விஜயகாந்த் வீடு திரும்பியதால் தொண்டர்கள் மொட்டை அடித்து சிறப்பு வழிபாடு...!!

 
விஜயகாந்த்

தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைபாடு காரணமாக வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.   நவம்பர் மாதம் 18ம் தேதி திடீர் உடல்நிலக்குறைபாடு காரணமாக  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்த்

அவர் குணமடைந்து வீடு திரும்ப  தேமுதிகவினர் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்தனர்.  அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பல தலைவர்கள், ரசிகர்கள் கட்சி தொண்டர்கள் பலரும்  விஜயகாந்த் உடல்நலம் தேறி வரவேண்டும் என பிரார்த்தனை செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   இந்நிலையில், உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் நடிகர் விஜயகாந்த்  பூரண குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

விஜயகாந்த்


நேற்று வீடு திரும்பியதும் ரசிகர்கள் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து கொண்டாடினர்.  இந்நிலையில், கள்ளக்குறிச்சி அடுத்த பிரசித்தி பெற்ற ஆதிதிருவரங்க திருக்கோவிலில் தேமுதிக துணை செயலாளர் டி.கே.கோவிந்தன் உட்பட கட்சியினர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினர்.  விஜயகாந்த் வீடு திரும்ப வேண்டும் என்ற  வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.  விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web