பிரத்யேக வீடியோ... படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வயநாடு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை29 ம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் 5வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. வீடுகள் இடிவதனால், மரங்கள் சாய்வதனால் போன்ற இடையூறுகளால் மீட்பு பணிகள் முடிவுக்கு வராமலே இருந்து வருவதாகத் தெரிகிறது.
#WATCH | Kerala: Search and rescue operations in landslide-affected areas in Wayanad entered 5th day today. The death toll stands at 308.
— ANI (@ANI) August 3, 2024
Drone visuals from Bailey Bridge, Chooralmala area of Wayanad. pic.twitter.com/OQ7GpKvwND
இப்படி ஒரு மோசமான பேரிடரை சந்தித்த வயநாடு தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இது குறித்து வெளியாகி உள்ள வீடியோ பதிவில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளின் பாதைகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மிக அதிக பாதிப்புகளை சந்தித்த சூரல்மலையில் உள்ள பெய்லி பாலத்தில் அங்குள்ள மக்கள் அங்கும் இங்கும் பாலத்தை கடந்து செல்கின்றனர். இப்பகுதியில் மழையும் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் வயநாடு முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
