கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு.. மனைவி, கணவன் அடுத்தடுத்து தற்கொலை.. உறவினர்கள் பெரும் சோகம்... !

 
தேன்மொழி

இன்றைய இளம் தம்பதியினருக்கு சவால்களை சமாளிக்கும் திறமை குறைந்துவருகிறது. சின்ன சின்ன சண்டை, பிரச்சனைகளுக்கு மன அழுத்தத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் பல நேரங்களில் விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.  பெற்றோர்களின் நிலையை நினைத்து பார்ப்பதே இல்லை என கவலை தெரிவித்துள்ளனர் சமூக ஆர்வலர்கள். 
 வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார்.

தேன்மொழி

34 வயதாகும் இவர்    சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி. இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கேகே நகரில் இருவரும் வீடு எடுத்து தங்கியிருந்தனர். இதில் அருண்குமாருக்கும், வேறொரு பெண்ணிற்கும்  தொடர்பு இருப்பதாக அறிந்த தேன்மொழி இது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் திருமணம் நடந்த  நாள் முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு தான். இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த   தேன்மொழி  பிப்ரவரி 4ம் தேதி  தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.   உறவினர்கள் ஒன்றுகூடி  தேன்மொழியின் தற்கொலைக்கு காரணமான கணவர் அருண்குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியல் செய்தனர். உடனடியாக   சம்பவ இடத்திற்கு வந்த ஆர்டிஓ பிரேமலதா, தேன்மொழியின் உறவினர்களிடம்   உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்தார்.

ஆம்புலன்ஸ்

இதன் பிறகே அவர்கள்  போராட்டத்தை  கைவிட்டனர். இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் அருண்குமார் தங்கியிருந்த அறைக்கு  பிப்ரவரி 5ம் தேதி   காலை அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது, அவரை காணவில்லை. உடனடியாக  அவர்கள்  கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் தேடத் தொடங்கியிருந்த நிலையில்  அருண்குமார் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக  சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web