பகீர்... கணவனுக்கு கை, கால், கழுத்து, மார்பு என 15 இடங்களில் வெட்டு!! மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவிலில் பணியாளராக வேலை செய்து வருபவர் ஸ்வாமிநாதன். இவருடைய மனைவி சுதா . இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சமீபகாலமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. ஸ்வாமிநாதன் சுதாவின் சித்தியுடன் தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து சுதா தனது சித்தியுடன் கணவர் ஸ்வாமிநாதன் பழகுவதை கண்டித்துள்ளார். அத்துடன் விட்டு விடுமாறும் கேட்டுளார். அதற்கு ஸ்வாமிநாதன் அதெல்லாம் முடியாது எனக் கூறி மனைவி சுதாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சுதா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று ஸ்வாமிநாதன் வீட்டில் இருந்த போது சுதா காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து 15 இடங்களில் அவரை கழுத்து, மார்பு, கை, தோள்பட்டை என சராமாரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த ஸ்வாமிநாதன் உடனடியாக அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வாமிநாதன் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!