பழச்சாறு அருந்திய இளம்பெண் பலி... கதறித்துடித்த பெற்றோர்!!

உணவே மருந்து என்ற காலம் மலையேறிவிட்டது. உணவே விஷமாகும் காலம் பெருகிவருகிறது. பழச்சாறு குடித்த இளம்பெண் திடீரென உயரிழந்துள்ளார். கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சேனி பகுதியில் வசித்து வருபவர் லீலாவதி . இவர் வீட்டில் இருந்த ஒரு பழத்தை எடுத்து பழச்சாறு போட்டு குடித்துள்ளார்.
இந்நிலையில் அந்த பழச்சாறை குடித்த சில மணி நேரத்தில் திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், லீலாவதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் லீலாவதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷத்தன்மை கொண்ட பழத்தை அவர் பழச்சாறு போட்டு குடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...