தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ... அதிமுக ஆட்சியமைந்ததும் உறுதி!
தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் அதிமுக ஆட்சியமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கோவையில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்துள்ளார்.கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் நேற்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியும், நடிகை விந்தியாவும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும். கூட்டத்திற்கு வரவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவோம் என்று திமுகவினர் சொல்வார்கள். அப்படியெல்லாம் பணத்தை நிறுத்த முடியாது” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!