மகளிர் உலகக் கோப்பை நாளை இறுதி போட்டி... இந்தியா வென்றால் ரூ.125 கோடி பரிசு!
மகளிருக்கான 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா ஆகியவை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாதவை என்பதால், நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே மைதானத்தில் அரையிறுதியில் 339 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திய இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வதில் முன்னிலை வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் சுமார் ரூ.125 கோடி அளவிலான பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ஆண்கள் அணிக்கு வழங்கிய அதே அளவிலான ஊதியம் மற்றும் பரிசுத் திட்டத்தை மகளிர் அணிக்கும் வழங்குவதாக பிசிசிஐ முன்பே உறுதியளித்திருந்தது. 2017-இல் லார்ட்ஸ் மைதானத்தில் நெருங்கிய வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பரிசை விட, இம்முறை பரிசுத் தொகை 10 மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
