சிக்கன் பிரியாணியில் புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி!!
உணவே மருந்து காலம் போய், உணவே விஷமாகும் காலம் என்பதற்கு ஏற்றாற் போல் சாப்பிடுவதற்காக வாங்கும் உணவில் பல கலப்படங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வாத பொருட்களால் வாந்தி, மயக்கம், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது . ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கண்ணன் 3 பிரியாணி பார்சல் வாங்கினார்.
இவர் பட்டினம்காத்தான் ஊரில் வசித்து வருபவர். வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், சாப்பிட முயன்றபோது பிரியாணியில் புழு கிடந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது மொபைலில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் 3 பார்சல் வாங்கியதாகவும் அந்த பிரியாணியில் 2 புழுக்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த பிரியாணி மற்றும் உணவுப்பொருள்களை ஆய்வு செய்ததில் அந்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. சாப்பிட வாங்கிய பிரியாணியில் புழு கிடந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...