எழுத்தாளர் தேவிபாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு!

 
தேவி பாரதி

மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு  தமிழில் வெளியான ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசால் ஒவ்வொரு வருடமும், தேசிய அளவிலும், மாநில அளவிலும்  சாகித்ய அகாடமி அங்கீகரித்த மொழிகளில் இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டு தோறும் 24 விருதுகளையும், இந்திய மொழிகளில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு சம எண்ணிக்கையிலான விருதுகளையும் வழங்குகிறது.

தேவி பாரதி

அதன்படி இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நீர் வழிபடூஉம்’ என்ற  நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி  விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேவி பாரதி
எழுத்தாளர் தேவி பாரதி, ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ராஜசேகரன். 40 ஆண்டுகளாக எழுதி வருகிறார். நிழலின் தனிமை என்ற நாவல்  இவரது சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது.  அற்ற குளத்து அற்புத மீன்கள்,  பிறகும் ஒரு இரவு,  நொய்யல் உள்ளிட்ட பல படைப்புகளை படைத்துள்ளார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் பிறகு முழுநேர படைப்பாளியாக ஆனார். அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை எடுத்து எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள்  அவருக்கு பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web