9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து விட்டது. மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் கேரளாவில் மழை தீவிரம் அடையலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் . காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...