அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட்!
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, செப்டம்பர் 25, 26, 27 தேதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ”அடுத்த 3 நாட்களில் குறிப்பிட்ட சில இடங்களில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும். மேலும், அடுத்த 7 நாட்களுக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை என்பது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. திடீர் கனமழை காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்படலாம், சாலையோரங்களில் நீர் தேங்கலாம், மேலும் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
