மாணவர்களின் அடாவடி.. கொடூரத்தால் இளம்பெண் சோக முடிவு !!

 
பசுபதி

பாலியல் தொந்தரவால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் படித்து வந்த மாணவரான அரியக்குடியை சேர்ந்த பசுபதி (எ) இளவரசன்(22) என்பவர், தேவகோட்டை ரெகுநாதபுரத்தை சேர்ந்த பாலகணேஷ்(19) ஆகியோர் மாணவியிடம் முதலில் நட்பாக பழகியுள்ளனர். 

பசுபதி

பின்னர் செல்போனிலும் பேசத்தொடங்கியதாக கூறப்படுகிறது. இளம்பெண் தங்களுடன் சாதகமாக எடுத்தக்கொண்ட இளைஞர்கள் இருவரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் அந்த மாணவி அவர்களிடம் இருந்து வெளியேறினார். எனினும் பாலியல் தொல்லையால் மனமுடைந்த மாணவி, கடந்த வாரம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயன்றார். 

வீட்டில் மயங்கிவிழுந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது தான் அவர் எலி மருந்தை சாப்பிட்டது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இறந்தார்.

பசுபதி

இதுகுறித்து மாணவியின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து பசுபதி என்ற இளவரசன், பாலகணேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web