ஷோ-ரூமில் காத்திருந்த தாய்... டெஸ்ட் ட்ரைவ் சென்ற மகன் பலியான சோகம்!
கேரள மாநிலம் வரப்புழா கன்னத்தராவைச் சேர்ந்த நிதின் என்பவருக்கு பிறந்தநாள் பரிசாக புதிய பைக் வாங்க புதன்கிழமை (06.03.2024) மதியம், வரபுழாவில் உள்ள பிரபல பைக் ஷோரூமுக்கு நிதினும் அவரது தாயும் சென்றனர். தனக்குப் பிடித்த பைக்கை வாங்க ஷோரூமை அடைந்த நிதின் நாதன் தனது புதிய பைக்கை டெஸ்ட் ரைடுக்கு எடுத்துச் சென்றார். அப்போது நிதினின் அம்மா பைக் ஷோரூமில் காத்திருந்தார்.
சோதனை ஓட்டம் செய்து கொண்டிருந்த போது, எளம்குளம் என்ற இடத்தில் வளைவில் வாகனத்தை திருப்பிய போது, நித்தின் பைக் கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ கட்டுமான தூண் மீது மோதியது. விபத்து நடந்த பகுதி ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி என்பதால், விபத்து நடந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிதின் நாதன் சாலையில் கிடந்தார்.
பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் நிதினை பார்த்து மீட்டு விட்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின் நிதினின் தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தாய் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிதின், தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறந்தநாள் பரிசாக பைக் வாங்கச் சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!